வெள்ளி, 6 மார்ச், 2015

நமது அனைவரது கனவும் டாக்டராக, இன்ஜினியராக ஆக வேண்டும் என்பதுதானே !

                              நாம் அனைவரும் சிறுவர்களாக இருந்த போது பள்ளியில் படிக்கும் காலத்தில் "நான் நன்றாக படித்து பெரிய இன்ஜினியராக ஆக வேண்டும். நல்ல டாக்டராக ஆக வேண்டும்" என்பதே நமது எல்லோரது பெருங்கனவாக இருந்தது. நானும் அதுபோலவே சிறுவயதில் கனவுகளை சுமந்தவன்தான் ! ஆனால் பள்ளியிறுதி வகுப்பிற்கு மேல் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க இயலவில்லை. ஆனால் அகுபங்சர் என்ற மருத்துவத்தை பற்றி அறிந்த பிறகு, நானும்  அதனை கற்று ஒரு நோய் நீக்கும் நிவாரணராக, ஹீலராக(Acupuncturist ) ஆகியிருக்கிறேன்.
                                    இதைப் போல் ஒரு டாக்டராக ஆகவேண்டும் என்ற பெருங்கனவோடு படித்த ஒருவர் டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் இறைவழி மருந்தில்லா மருத்துவ கூட்டத்தில் கலநது கொண்டு ஆங்கில மருத்துவத்தில் இருந்து எவ்வாறு இறைவழி மருத்துவத்திற்கு மாறினார் என்பதனை கீழ்வரும் ஹெல்த் டைம் கட்டுரையின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி இங்கு இணைய தளத்தில் வெளியிடப் படுகிறது.
                        வீட்டுச் சூழலில் இறையருளால் சுகப்பிரசவம் !  
    டாக்டர் ஆக வேண்டும்;மக்கள் போற்றி புகழ வேண்டும்,பெருமை கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் MBBS படிப்பை முடித்து விட்டு, அதைத் தொடர்ந்து மேற்படிப்பு பிரிவில் காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவப் படிப்பில் எனக்கு இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்த நேரம், முதன்முதலாக டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
                                        இறைவழி மருத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.உணர்ச்சிகளில் வாழாமல், உணர்வுகளில் வாழ வேண்டும்.அகப் பார்வை கொண்டு வாழ்தல்; ஞானம்,சிந்தனை கொண்டு செயல்படுதல் போன்றவை அக்கூட்டத்தின் மூலம் எனக்கு கற்பிக்கப் பட்டது.இறைவன் அருளால் இறைவழி வாழ்க்கை 2008ம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்தது. என் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தாட்சிகள் எனக்கு காண்பிக்கப் பட்டது.அதுவரை என்னுள் இருந்த உருவ வழிபாடும்,ஆங்கில மருத்துவ வழிமுறையும் இப்பொழுது அறவே நீங்கி மன அமைதியும், இறைவனின் அருளும் எனக்கு கிடைத்தது. 
                                                  விபத்தினால் இரு முழங்கால் முட்டி ஜவ்வில் ஏற்பட்ட வலியை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப் படுத்த முடியும் என்று கூறப்பட்ட ஆங்கில மருத்துவக் கூற்றை இறைவன் அருளால் பொய்யாக்கி முழுமையாக அவனுடைய அருளால் நீங்கியது. தோல் அலர்ஜி ஏற்பட்டு பல வருடங்களாக மாத்திரை,மருந்துகளை சாப்பிட்டு வந்து குணமாகாமல் இருந்த என்னை இறைவழி வாழ்க்கையின் மூலம் முற்றிலுமாக என் உடலில் அலர்ஜி மறைந்தது,இறைவழியில் திருமணம், இறைவன் அருளால் முதல் குழந்தை வீட்டிலேயே சுகப்பிரசவம்,இன்னும் தினம் தினம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அத்தாட்சிகள் தெளிவாக்கப் பட்டது.
                                                  இறைவன் அருளால் இரண்டாவது குழந்தை கருவுற்றது. 'அவன்தான் கர்ப்ப காலங்களில் தான் நாடிய படி உங்களை உருவாக்குகிறான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும்,ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான்; எங்களுக்கு இரக்க சிந்தனையையும், பரிசுத்தத் தன்மையையும் அளிப்பாயாக; பயபக்தியுடையவராக இருக்கச் செய்வாயாக; அவர் பிறக்கும் நாளிலும்,இறக்கும் நாளிலும் இன்னும் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தியும்,சமாதானமும் நிலைத்திருக்கச் செய்வாயாக' என்று இணையதளத்தில் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் எழுத்து மற்றும் பேச்சின் மூலம் அருளப் படும்  இறை செய்திகள் அனைத்தும் என் பிரார்ததனையாக மனதில் அமைந்தது.
                              எனக்கு பிரசவம் இலேசாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மனதில் பத்து மாதங்களும் இருந்தது. 17.01.2015 அன்று இலேசான வலி அடிமுதுகில்  ஐந்து மணிக்கு மேல் ஏற்பட்டு, பத்து மணியளவில் கர்ப்பப் பை சுருங்குதல் அதிகமடைந்தது. வீட்டில் நானும், என் கணவரும் இறைவனிடமே பிரார்த்தித்துக் கொண்டும், டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் தொடர்பு கொண்டோம்.அவர் " கவலையும்,பயமும் கொள்ள வேண்டாம்; இறைவனின் உதவி நல்லபடியாக அமையும்." என்றார்.அந்த பிரார்த்தனை என்னுள் இருந்த சிறு பயத்தையும், கவலையையும் முற்றிலும் நீக்கியது. 
                    11.30 மணியளவில் குழந்தையின் தலை தெரிந்து, உடனே வெளியேறியது. தண்ணீர் பையுடன் அதுவரை அது உடையவில்லை.ஒரு நிமிடத்திற்குள் குழந்தை வெளியேறி அழுது உயிர் பெற்றது. குழந்தை தொப்புள் கொடியுடன் தாய்ப்பால் அருந்தியது. அடுத்த 5ஆவது நிமிடத்தில் நச்சுக் கொடி வெளியேறியது.பிறகு 20,25 நிமிடங்களுக்குப் பிறகு தொப்புள் கொடி வெட்டப் பட்டது. இவை அனைத்தும் இறைவனின் அருளால் என் கணவரின் மூலம் எங்கள் வீட்டின் அறையிலேயே நிறைவேறியது.
       எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய இறைவன் ஒருவனுக்கே !
                       டாக்டர் S.சர்மிளா.MBBS,MD.டாக்டர் K.ராஜ்சாண்டன். MBBS,MD
                                                                         சென்னை செல்; 94861 67715, 98942 23017

                                                                                               நன்றிஹெல்த் டைம் மார்ச் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக