செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எது நல்லது ? மரபு முறை விவசாயமா ? நவீன முறை விவசாயமா ? ம.செந்தமிழன்

சர்க்கரை-டயாபடீஸ் என்ற நோய் (அது ஒரு நோயே அல்ல) பற்றி " இனிப்பு " என்ற புத்தகம் எழுதியவரும், சர்க்கரை நோயைப் பற்றிய ஆவணப் படம் எடுத்து வருபவருமான திரு.ம.செந்தமிழன் அவர்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற "நீயா ? நானா ?"நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை,அவரது முகநூலில் பகிர்ந்து கொண்டதை, நமது அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
உங்களிடம் சொல்ல விரும்பும் அழுத்தமான சேதி!
                                                                                             ம.செந்தமிழன்

                           ’பசுமைப் புரட்சியின் விளைவாகத்தான் பஞ்சாப் சாராயத் தொழில் வளர்ச்சியடைந்ததுஎன சாராய ஆலை அதிபர் தனது அந்தரங்க கூட்டத்தில் பேசினால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், பொதுமக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘அறிவு ஜீவிஒருவர் பேசுகிறார். அதே நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன் என்பதால் அந்த சொற்களின் கழிவு என்மீதும் தெறித்ததை அருவருப்பாக உணர முடிகிறது.
வேறொரு இளைஞர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். அவர் முன்னால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பழங்களையும், மரபணு மாற்றப்பட்ட பழங்களையும் வைத்தால் அவர் இயற்கை வேளாண் பழங்களைத்தான் சாப்பிடுவாராம். ஆனால், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் எந்தத் தீமையும் இல்லையாம். ஆகவே, நாமும் நம் சந்ததிகளும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளைத் தின்றுகொள்ளலாமாம். இதுதான் அவர் கற்ற கல்வியின் நேர்மை!
மற்றொருவர், ‘நான் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானவை. இவ்வாறு சொல்வது எனது நம்பிக்கை. இது ஆய்வுப்பூர்வமான முடிவல்லஎன்று துளியும் கூச்சமின்றிப் பேசுகிறார்.
இந்த மூவரின் முதுகுகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த விவசாயிகள், ‘கத்தரிக்காயில் அதிகம் நஞ்சு தெளிக்கிறோம், உருளைக் கிழங்கை வாங்கிவிடாதீர்கள் அது முழுவதும் ஆபத்தானது, முட்டைகோசு என்றாலே நச்சுக் காய்தான், காலி பிளவரை நச்சு நீரில் முக்கி எடுப்போம்என்று வாக்குமூலம் தருகிறார்கள்.
இந்த நீயா நானாவில் இயற்கை வேளாண் அணியில், நாங்கள் பேசியவற்றைவிட எதிரே இருந்தவர்கள் பேசியவை மிகுந்த கவனத்திற்குரியவை.
நண்பர்களே, உங்களிடம் ஒரே ஒரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்,
நிச்சயமாக நாம் விற்கப்பட்டுவிட்டோம். நமது உணவு உரிமை நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டது. நமது வேளாண்மை உரிமை கொள்ளையிடப் பட்டு விட்டது
உணவையே நஞ்சாக மாற்றிய குரூர அறிவியலின் பலிகள் நாம். அது நம்மைப் பலி கேட்கிறது. நம்மில் பலர் அதற்குப் பலியாகிக் கொண்டும் இருக்கிறோம்.
நம்மிடம் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் உள்ளன. நம்மிடம் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் வசதியான வாகனங்கள் உள்ளன. நமது குடிநீர் நம்மிடம் இல்லை. நமது உணவு நம்மிடம் இல்லை. நமது நிலங்களும் நம்மிடம் இல்லை.
நேற்றைய நீயா நானா பார்த்துவிட்டு சென்னையிலிருந்து பேசிய எங்கள் தோழி பின்வருமாறு கூறினார், என் மகனை நான் பெற்றிருக்கக் கூடாது. வாழத் தகுதியில்லாத சமூகத்தில் அவன் பிறந்துவிட்டானே. அவனுக்கு நான் எந்தக் காயை, எந்தப்  பழத்தை நம்பிக் கொடுப்பேன்
              நீயா நானாவில் நான் பேசியதைப் பாராட்டி வாழ்த்துச் சொல்லும் நண்பர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆனால், அவை இப்போது தேவையற்றவை. நமக்காக நாம் பேசித்தான் ஆக வேண்டும். நமது சமூகத்திற்காக நான் பேசுகிறேன். இது என் கடமை. நீங்கள் உங்கள் கடமையை உணருங்கள்.
                                முதலில், இந்த அவல நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். நமது உணவையே நஞ்சாக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, நமது விளைநிலங்களை, நமது உழவர்களை, நமது மரபுகளைப் பாதுகாக்கும் பணிகளில் உடனடியாக ஈடுபடுங்கள். நாம் பணியாற்றியே தீர வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. நமது சமையலறைக்குள் ஆட்கொல்லி நஞ்சுகளை அனுமதிப்பதைக் காட்டிலும் ஆபத்து ஏதுமில்லை.
நம் பிள்ளைகளின் முகங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊட்டி விடும் ஒரு பிடிச் சோறு நஞ்சற்றதாக இருக்கட்டும்!

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அளவாக மது (ஆல்கஹால்) அருந்தினாலும் அது ஆபத்தே!

தினமும் மிதமான அளவுக்கு மது அருந்தினால்,அது இதயத்திற்கு நல்லது, இரத்த அழுத்தத்தை குறைக்கும் என சில தரப்பில் சொல்லப் படுவது உண்டு.ஆராய்ச்சிகளிலும் உண்மையே என முன்னர் நிரூபிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஒரு கோப்பை 'ரெட் ஒயின்' அருந்தினால் அது இதயத்திற்கு மிகவும் நல்லது என,மற்றவர்களிடம் தகவல் பரப்பி வருவோர் அதிகம்.
                       ஆனால் இது தவறு என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக கூறியதாவது;
       "குடிப் பழக்கத்திற்கும், இதயத்தின் பலத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.அமெரிக்கா,ஐரோப்பா,வடஅமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 155 ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.2.60 இலட்சம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர்."
                   "குறிப்பிட்ட ஜீன்கள் கொண்ட நபர்கள்,வாரம் ஒன்றுக்கு,17 சதவீதத்திற்கும் குறைவான மது பானத்தை நுகரும் போது,அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதும்,மாறாக இதயத்திற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில்,மதுபானம் உபயோகிக்காத நபர்களுக்கு இதயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதனால் குறைவாக மது அருந்தனாலும் அது பாதிப்பையே ஏற்படுத்தும்"
                   இவ்வாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
                                                                   நன்றி; தினமலர்,10.08.2014 கோவை பதிப்பு
               மேலே கண்டுள்ள மதுவைப் பற்றிய செய்தியானது பிரபல தமிழ் நாளிதழில் வந்ததாகும். நமது சமுதாயத்தில் மதுவைப் பற்றிய கூற்றுக்களும்,செய்திகளும் முரண்பாடான நிலையிலேயே நிலவி வருகின்றன. ஆதி நாளில்,இந்தியாவில் ஆரிய நாகரிகம் நிலவிய காலத்தில் அக்காலத்திய மனிதர்கள் சோம பானம்,சுரா பானம் ஆகியவைகளை அருந்தியதாக ரிக் வேதத்தில் கூறப் பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது.
                     உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்பவும் மதுப் பழக்கமானது மனிதர்களால் கடைப் பிடிக்கப் பட்டு வரப் படுகிறது. மனித குலம் தோன்றிய ஆதி நாளிலிருந்தே மனிதன் மதுவை அருந்த  துவங்கி விட்டான். ஆதாம்,ஏவாள் காலத்திலேயே உண்ண தடை செய்த கனியை உண்டதன் மூலம் நமது பாவங்கள் தொடங்கியதாக பைபிளில் கூறப் பட்டது போல, ஆதி நாளிலேயே மனிதன் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகி விட்டான்..
                         2000 வருடங்களுக்கு முன்பே நமது தெய்வப் புகழ் திருவள்ளுவரும் தனது திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என ஒரு அதிகாரத்தை பதிவு செய்து தனது மதுவின் மீதான எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளார்.
                                     மதுவைக் குறித்த  நமது தமிழ்நாட்டின் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால் மனசாட்சியுள்ள எவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையே உள்ளது. அரசே மதுவிற்பனை செய்வதால் தமிழக மக்கள் அனைவருமே "குடிமகன்களாக" ஆகி விட்டார்கள். நடுத்தர மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் அவர்கள் பெரும் வருமானம் அனைத்தும் இந்த மதுவிற்கே செலவு செய்தால் அவர்தம் குடும்ப வாழ்க்கைத் தரம்தான் எவ்வாறு இருக்கும்இந்த மதுப் பழக்கத்தால்தான் நாட்டில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும்,ஒவ்வொரு தேர்தலையும் இந்த மதுப்பழக்கமே தீர்மானிக்கிறது.
                         தேர்தல் = பணம் + மது
         தற்போது நிலவி வரும் இந்த நிலை எப்போது மாறும் ?
           இறைவன் நாடினால் !
                                   மது (ஆல்கஹால்) வின் தீமைகள் குறித்து ஆங்கில ஆசிரியர் Martha M. Allen என்பவர் எழுதிய  Alcohol: A Dangerous and Unnecessary  என்ற நூல்  www.gutenberg.org  என்ற இணைய தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது. இந்நூலில் மதுவின் தீங்குகளைப் பற்றி தெள்ளத் தெளிவாக விவரித்திருப்பதோடு,ஆல்கஹாலை மருந்துகளில் கலப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பின்விளைவுகளும் குறிப்பிடப் பட்டுள்ளன.
                          இன்று ஆங்கில மருத்துவத்தால் பரிந்துரைக்கப் படும் டானிக் மற்றும் அனைத்து திரவ மருந்துகளில் ஆல்கஹால் கலக்காத மருந்துகளே இல்லை.
                           மேலே கண்ட நூலில் காணப் படும் வாசகங்கள்
                                 Foods are substances which, when taken into the body, undergo change by the process of digestion; they give strength and heat and force; they build up the tissues of the body, and make blood; and they induce healthy, normal action of all the bodily functions.
 Alcohol does none of these.

"The internal use of alcohol in disease is as injurious as in health."

வெள்ளி, 30 ஜனவரி, 2015

இறைவன் யார் ? இறைவன் எங்கு இருக்கிறான் ?

இறைவன யார் என்பதிலும் இறைவன் எங்கிருக்கிறான் என்பதிலும் மனிதர்களிடையே ஏராளமான கருத்து வேறுபாடுகளும் , மாறுபாடுகளும், முரண்பாடுகளும் இருக்கின்றன! இறைவன் தூணிலிருக்கிறான்,துரும்பிலிருக்கிறான்.இறைவனின்றி ஓரணுவும் அசையாது என ஆன்மீகவாதிகளும்,இறையடியார்களும் ஏராளமாக பேச கேட்டிருக்கிறோம்.
                                          ஆனால் இறைவன் எங்குதான் இருக்கிறான் என மனிதர்கள் முழுமையாக உண்ர்ந்தார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.! எனவேதான் இறைவனை கோயில்களிலும்,மசூதிகளிலும்,சர்ச்சுகளிலும் தேடிக் கொண்டும்,வழி பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
                                                     இறைவன் படைப்பாளன் ! எதையும் முன்மாதிரியின்றி படைப்பவன்! மனிதர்களின் ஒருவர் கைரேகையைப் போல் மற்றவர்களுக்கு இல்லாமல் வித்தியாசமாக படைப்பவன்.அதே போல குரல்,தலைமுடி,இரத்தம்,கண்கள் என முழு மனிதனையும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்களாக தனது ஞானத்தால் வித்தியாசமாக படைப்பவன்.நமது அறிவாலும்,உணர்வாலும் அறியக் கூடியவனும்,உணரக் கூடியவனுமான இறைவன் இப்பிரபஞ்சத்திற்கு உள்ளேயும்,வெளியேயும் இருந்து ஆட்சி புரிபவன்.அவன்தான் நமது ஒரே இறைவன்!
                                               நமது தேவைகளையும்,விருப்பங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றும் இறைவன் அவரவர் மனங்களில்,இருதயங்களில் கோயில் கொண்டிருக்கிறான் என்பதை மனிதர்கள் உணரவில்லை. We cannot come into physical relationship with God, for God is mind-stuff and we also are mind-stuff; our relation with Him must therefore be a mind relation.
                            இறைவன் மனிதர்களின் அகங்களில் மட்டுமே இருக்கிறான்,எண்ணங்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்கிறான் என்பதற்கான ஒரு இறை அத்தாட்சி இங்கு கீழே வெளியிடப் படுகிறது.
                                    டாக்டர்.ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் உதவியாளராக இருப்பவரும்,டாக்டர் அவர்களின் இறைவழி மருந்தில்லா மருத்துவ கருத்தரங்குகளில் தமிழகம் முழுவதும் கலந்து கொள்பவருமான திரு.A.S.அகமது கான் அவர்கள் உணர்ந்த இறை அத்தாட்சி !
              காணமல் போன பெண்மணி திரும்பக் கிடைத்த மாபெரும் இறை அத்தாட்சி !
                                                            சென்ற 20 நாட்களுக்கு முன் துபாயில் வசிக்கும் என்னுடைய சகோதரரின் மகன் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.அவர் இந்த செய்தியைக் கூறினார்."என் கடையில் உதவியாளராக இருக்கும் முஸ்தபாவின் மனைவியை அவருடைய ஊரிலிருந்து காணவில்லை.பலமுறை போன் செய்து பார்த்தும்,அங்குள்ள சொந்தக் காரர்கள் வீட்டில் விசாரித்தும் எந்தத் தகவலும் இல்லை.முஸ்தபாவும் இங்கு வருத்தத்துடன் காணப்படுகிறார். என்ன செய்யலாம் என்றும் தெரியவில்லை.போலீஸிடம் புகார் செய்யலாமா?" என்றும் என்னிடம் கேட்டார். நான் கூறினேன்." இறைவன் என் மனதில் உணர்த்துவது அவர் கிடைத்து விடுவார் என்று என் மனதில் படுகிறது.ஆகவே டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் கூறிய படி இன்னும் 2 நாட்கள் பார்க்கலாம்" என்று கூறினேன்.அவரும் சரி என்று சொல்லி போனை வைத்தார். இதற்கு முன்பு டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் முஸ்தபா தன் மனைவி காணாமல் போனதை தெரிவித்து பிரார்த்தனை செய்ய சொல்லியிருக்கிறார்.டாக்டரும், கரானிலிருந்து வசனத்தை எடுத்துக் கூறி அவர் மனதுக்கு அமைதி அளித்தார்.
11:6 இன்னும் தேவைகளை நிறைவேற்றித் தர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.அவை வாழுமிடத்தையும்,அவை அடங்குமிடத்தையும் அவன் அறிகிறான்.இவையனைத்தும் தெளிவான அவன் சாட்சியங்ளில் இருக்கின்றன.
  "மேற்கண்ட வசனத்தின் மீது இறைவன் சாட்சியமாக அவன் மீதே பொறுப்பேற்படுத்தி நம்பிக்கையையும்,பொறுமையையும் மேற்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
                         இப்படியே 2 நாட்கள் ஆகி விட்டது. 2ஆவது நாள் என்னுடைய சகோதரரின் மகன் திரும்பவும் எனக்கு போன் செய்து "2 நாட்கள் ஆகி விட்டதே,உடனடியாக போலீஸில் புகார் கொடுத்து விடுவோமா?" என்று திரும்பவும் கேட்டார். என் மனதிற்கு அப்பொழுதும் வேண்டாம் என்றே பட்டது. நான் திரும்பவும் "போலீஸ் ஸ்டேஷன் போனால் தேவையற்ற கேள்விகளை கேட்பார்கள்.அதுவும் கணவன் வெளிநாட்டில் இருப்பதால்.இன்னும் ஓரிரு நாட்கள் பார்க்கலாமே,இப்பொழுது வேண்டாம்" என்று கூறினேன்.3 நாட்கள் ஆகின.முஸ்தபா மிகவும் வருத்தத்தில் இருப்பதால் என்னுடைய சகோதரரின் மகன் டிக்கெட் எடுத்து துபாயிலிருந்து இந்தியாவுக்கு அவரை அனுப்பி வைத்தார்.முஸ்தபா திருச்சி ஏர்போர்ட்டில் இறங்கி அவரது சொந்த ஊருக்கு காரில் போய்க் கொண்டிருப்பதாகவும் எனக்குத் தெரிவித்தார்.
                               அப்பொழுது என் அம்மாவை ஊரில் கொண்டு விடுவதற்காக நான் திருநெல்வேலி சென்றிருந்த சமயம்.முஸ்தபாவுக்கு போன் செய்து "போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்கப் போகிறீர்களா?" என்றேன்.அவர், "இல்லண்ணே,எனக்கு குழப்பமாக இருக்கிறது.ஊர் சென்ற பிறகுதான் முடிவு செய்ய வேண்டும்." என்றார். அதுவரையிலும் எனக்கு திருப்தியாக இருந்தது.
                              என் அம்மாவை திருநெல்வேலியில் எங்கள் வீட்டில் கொண்டு விட்டு விட்டு மறுநாள் அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.
                                              நெல்லையிலிருந்து இரவு 7.25 மணிக்கு கிளம்பிய ரயில் 8.40 மணிக்கு கோவில்பட்டி வந்து சேர்ந்தது.மிகவும் சோர்வாக இருப்பதால் சாப்பிட்டு விட்டு நன்றாக தூங்கி விட்டேன்.இரவு 10.40 மணி இருக்கும்.திடீரென விழிப்பு வந்தது.லேசாக தலையைத் தூக்கி எங்கு ரயில் நிற்கிறது என பார்ப்பதற்காக வெளியில் பார்த்தேன்.ரயில் மதுரை ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தது.'சரி இறங்கி போய் பால் சாப்பிடலாம்' என்று நினைத்து ஸ்டேஷனில உள்ள கேன்டீனில் பாலை வாங்கி சாப்பிட்டு கொண்டிருக்கும் போது,என்னுடைய சகோதரரின் மகன் என்னுடைய போனில் தொடர்பு கொண்டு,'முஸ்தபாவின் மனைவி கிடைத்து விட்டார்' என்றும்,அவர் மதுரையில் இருப்பதாகவும் கூறினார்.நான் "மதுரையில் எங்கே இருக்கிறார்?" என்று கேட்ட போது,மதுரையில் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக கூறினார்.எந்த போலீஸ் ஸ்டேஷன் என்று கேட்ட போது,"மதுரை ரயில்வே நிலைய போலீஸ் ஸ்டேஷனில்  இருக்கிறார்.உடனடியாக நம்முடைய மதுரை சகோதரர் அயூப்கான் அல்லது ரஃபி யாரிடமாவது சொல்லி மதுரை போலீஸ் ஸ்டேஷன் சென்று அவரை அழைத்துக் கொள்ள சொல்லுங்கள்" என்றார். அப்பொழுது நான் அவரிடம் "என்னுடைய ரயில் இப்பொழுது மதுரை ஸ்டேஷனில்தான் வந்திருக்கிறது.இப்பொழுதே நான் போய் விசாரிக்கிறேன்" என்று கூறினேன்.அவர் "ரயிலை விட்டு விடாதீர்கள்.முடிந்த வரை பாருங்கள்" என்றார்.ரயில் நிலைய போலீஸ் ஸ்டேஷனோ நான் இருந்த கடைசி பெட்டியின் கோடியிலிருந்து மறுகோடியின் இன்ஜின் பக்கத்தில் இருந்தது.'ரயில் புறப்பட்டு விடுமே' என்ற எண்ணமே இல்லாமல் பிளாட்ஃபாரம் நெடுக வேகமாக ஓடினேன்.
                                            சிக்னலைப் பார்த்தேன்.சிகப்பு விளக்குதான் இருந்தது.'போய் பார்த்து விட்டு வந்து விடலாம்' என மனதில் நினைத்துக் கொண்டு இன்னும் வேகமான ஓடினேன். ஸ்டேஷைக் கண்டு பிடிப்பதற்குள் ஐந்து நிமிடங்களுக்கும் மேலாகி விட்டன.அங்கு சென்று பார்த்தால் போலீஸ் ஸ்டேஷன் இயங்குவது ரயில் நிலையத்தின் முதல் மாடியில் என்றார்கள்.என்ன செய்வது ! போலீஸ் ஸ்டேஷன் முதல் மாடிக்கு என்னுடைய ரயில் நிற்கிறதா? போகிறதா என்று பார்க்க முடியாது.ஆகவே முன்பதிவு கோச்சிலிருந்து இறங்கி டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவரிடம்," நான் முதல் மாடி போலீஸ் ஸ்டேஷன் போகிறேன்.தாங்கள் தயவு செய்து ரயில் கிளம்பினால் ஒரு சத்தம் கொடுங்கள்.நான் கீழே வந்து விடுகிறேன்." என்று அவசரமாக சொல்லி விட்டு, படிக்கட்டுக்களில் ஏறி முதல் மாடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றேன்.அங்கு அறையில் ஒருவருமே இல்லை.அடுத்த அறைக்குள் எட்டிப் பார்த்த போது, அங்கு ஒரு போலீஸ்காரர் அரைத் தூக்கத்தில் இருந்தார்.அவரிடம் விபரத்தை கூறிய போது, "இங்கு அப்படி எந்தப் பெண்ணும் வரவில்லையே சார்,நீங்கள் வேண்டுமானால் உள்ளே போய் பாருங்க" என்று மற்றொரு அறையைக் காட்டினார்.உள்ளே போய் பார்த்தால் அங்கு யாருமே இல்லை.அவருக்கு நன்றி கூறி விட்டு அங்கிருந்து கீழே இறங்கி என்னுடைய S 12 கோச்சை நோக்கி 'ரயில் புறப் பட்டு விடக் கூடாதே' என்று ஓட ஆரம்பித்தேன்.நடை மேடையில் பாதி தூரத்தில் வந்த போது,ஒரு இடத்தில் யாரையோ சூழ்ந்து ஒரே கூட்டமாக நின்று கொண்டிருந்தது தெரிந்தது. என்னவென்று பதட்டத்துடன் நானும் அந்த கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் அங்கு என் நண்பர் முஸ்தபாவின் மனைவி மயங்கிக் கிடக்க ஒரு நர்ஸ் முதலுதவி என்ற பெயரில் என்னமோ செய்து கொண்டிருந்தார்.அவர் அருகில் 2 பெண் போலீஸ் மற்றும் 2 ஆண் போலீஸ் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தார்கள்.
                                                 நான் அவர்களிடம் இவர் என் நண்பருடைய துணைவியார்.இவரை எனக்கு தெரியும் என்று சொன்னபோது," நீங்களும் இவருடன் வந்தீர்களா?" என்று கேட்க, நான் அவரிடம் " நெல்லையிலிருந்து சென்னை போய் கொண்டிருக்கிறேன்.எனக்கு இப்பொழுதுதான் மதுரை ஸ்டேஷனை வந்தடைந்த இந்த நேரத்தில்தான் இவரைப் பற்றிய செய்தி போன் மூலமாக வந்தது.எனவேதான்,என்னுடைய ரயில் சென்று விடக் கூடாதே என்று பதட்டத்துடன் ஓடி வந்திருக்கிறேன்" என்று கூறினேன்.அதற்கு போலீஸ்காரர் கூறினார்," இவர் மயக்கத்தில் இருக்கிறார்.நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இவருடைய மயக்கம் தெளிந்த பாடில்லை.ஆகவே 108க்கு போன் செய்திருக்கிறோம்.ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது." என்றார். நான் உடனடியாக முஸ்தபாவிற்கு போன் செய்து,"தங்களின் துணைவியாரை நான் நேரில் பார்த்து விட்டேன்" என்று சொன்னவுடன் அவர் "எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்று சொன்னார். ஆனால் "அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார்,இவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் மயக்கம்  தெளியாததால் 108க்கு போன் செய்திருக்கிறார்கள்" என்று சொன்னதும்,முஸ்தபா "எதுவும் தேவையில்லை.ஒரு காய்ந்த மிளகாய் இருந்தால் நன்றாக சூடு காட்டி அவர் மூக்கின் அருகில் அந்த நெடியை காட்டுங்கள்.மயக்கம் தெளிந்து விடும்" என்றார்.அவரிடம் சரி என்று சொல்லி விட்டு இந்த நேரத்தில் எங்கு போய் காய்ந்த மிளகாயைத் தேடுவது என்று நினைத்துக் கொண்டே கொஞ்சம் தொலைவில் இருந்த ரயில்வே உணவு கேன்டினில் போய்"ஒரு காய்ந்த மிளகாய் இருந்தால் தாருங்கள்" என்று கேட்டேன்.அங்குள்ளவர் என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்து விட்டு "இப்பொழுது இரவு 11 மணி ஆகிறது சார்,கடையை மூடிக் கொண்டிருக்கிறேன்.இந்த நேரத்தில் போய் காய்ந்த மிளகாயைக் கேட்கின்றீர்களே? என்ன சார்? என்ன பிரச்சினை ?" என்று கேட்டார்.நான் தூரத்தில் கூட்டத்தைக் காட்டி " அங்கு ஒருவர் மயக்கமாக இருக்கிறார்.அவரைத் தெளிய வைக்கத்தான்" என்றேன்.
                                      அவரும் என்னைக் குழப்பமாக பார்த்துக் கொண்டே " எல்லாம் விற்றுப்  போய் விட்டதே.காய்ந்த மிளகாய் இருக்காதே.பார்க்கிறேன்" என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றார்.சற்று நேரம் கழித்து உள்ளே சென்றவர் ஒரேயொரு காய்ந்த மிளகாய் தான் கீழே கிடந்தது" என்று நீட்டினார்.கிடைத்தது போதும் என்று அதனை வாங்கிக் கொண்டு என் நண்பரின் மனைவி மயங்கிக் கிடக்கும் இடத்திற்கு ஓடினேன்.
                      அங்கு வந்ததும் நான் உட்பட நான்கு பேர் சேர்ந்து அவரைத் தூக்கி படுக்க வைத்தோம்.உடனடியாக பக்கத்தில் உள்ளவரிடம் சிகரெட் லைட்டரை வாங்கி ஒரு பேப்பரில் பற்ற வைத்து,காய்ந்த மிளகாயை அதில் காட்டி அந்த நெடியை நண்பர் மனைவியின் முகத்தில் காட்டினேன். சடேரென அந்த நொடிப் பொழுதே மயக்கம் தெளிந்து,எழுந்து உட்கார்ந்து விட்டார்.உடனடியாக கண்களை மூடிக் கொண்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டார்.நான் அவரிடம் "நான் அகமதுகான் வந்திருக்கிறேன்.கவலைப் படாதீர்கள்.உங்கள் கணவர் வெளிநாட்டிலிருந்து வந்து விட்டார்.உங்களைப் பார்க்க மதுரை வந்து கொண்டிருக்கிறார்.அழாதீர்கள்.தைரியத்துடன் இருங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,முஸ்தபாவுடைய நண்பர்கள் 2 பேர் அங்கு வந்து விட்டனர்.முஸ்தபாவின் நண்பர்கள் என்றும், அவர் எங்களுக்கு போன் செய்து அவருடைய மனைவி இங்கிருப்பதை தெரிவித்த பிறகுதான் வந்திருப்பதாகக் கூறினர்.நான் உடனடியாக மதுரை ஸ்டேஷன் பக்கத்திலுள்ள இறைவழி மருத்துவக் கருதரங்குகளில் கலந்து கொள்ளும் சகோதரி ஒருவருக்கு போன் செய்து விபரத்தை சொல்லி," சகோதரர் முஸ்தபா மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார்.அவர் வரும் வரை அவருடைய துணைவியாரை உங்கள் வீட்டில் கொண்டு வந்து விடுவார்கள்.அவர்கள் உங்கள் வீட்டில் இருக்கட்டுமா? என்று கேட்ட போது,அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.நான் முஸ்தபாவின் 2 நண்பர்களிடத்திலும், 2 போலீஸ்காரர்களிடமும் இறைவழி சகோதரியினுடைய முகவரியைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே, முஸ்தபாவின் மனைவி " நான் முஸ்தபாவின் நண்பர்கள் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார். அந்த 2 நண்பர்களும் " நாங்கள் அவரை முஸ்தபா வரும் வரை எங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறோம்" என்று கூறினர்.அவ்விதமே, ரயில்வே போலீஸ் முன்னிலையில் முஸ்தபாவின் மனைவியை அவருடைய நண்பர்களிடம் ஒப்படைத்து "நல்ல முறையில் சேர்ப்பித்து விடுங்கள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,ஒரு போலீஸ்காரர் "சார்,உங்கள் ரயில் கிளம்பி விட்டது.சீக்கிரமாக ஏறிக் கொள்ளுங்கள்" என்றார்.எல்லான் கனகச்சிதமாக முடிந்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் சொல்லி வைத்தது போல் மணித்துளி பிறழாமல்  நடந்து முடிந்ததை எண்ணும் போது பிரமித்துப் போய் விட்டேன்.
                            ரயிலில் வேகமாக ஓடிச் சென்று ஏறிக் கொண்டேன்.சகோதரர் முஸ்தபாவுக்கு போனில் உங்கள் நண்பர்களுக்கு போன் செய்து " உங்கள் மனைவியை உங்கள் நண்பர்களிடத்தே ஒப்படைத்து விட்டேன். உங்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்"என்று தெரிவித்த பிறகுதான் நிம்மதி அடைந்தேன்.
                               ரயில் ஓடிக் கொண்டிருந்தது.என் இருக்கையில் அமர்ந்த பொழுது நினைத்துப் பார்த்தேன்.சாதாரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் மதுரையில் 10 நிமிடங்கள்தான் நிற்கும்.ஆனால்,45 நிமிடங்கள் நின்றிருக்கிறது.அங்கு என்னுடைய தேவையும் அந்த 45 நிமிடங்கள் முழுமையும்தான்.ஒரு நிமிடம் வீணாகாமல்,ஒரு நொடிப்பொழுதும் வீணாகாமல் ஒவ்வொரு விஷயத்தையும் இமைப்பொழுதின் இயக்கத்தில் முடித்து வைத்தான் மாபெரும் ஆற்றல் மிக்க அந்த இறைவன்.' யாவற்றையும் அறிந்தவன்.ஓருவர் வாழுமிடத்தையும்,அவர் அடங்கும் இடத்தையும் நன்கு அறிந்தவன் இறைவன்' என்ற அந்த வாக்கியம் எவ்வளவு சத்தியமானது என்று என் மனதிற்கு வந்தது.இந்த அத்தாட்சியை நமக்கும், இறைவழி சகோதரர் முஸ்தபாவிற்கும், டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்து ' விரைவில் கிடைப்பார்' என்று சொன்ன வார்த்தைக்காக இறைவன் காட்டிய அத்தாட்சியாகவே நான் உணர்கிறேன்.
                                  டாக்டர் அவர்களிடம் எந்த இறை வசனத்தின் அடிப்படையில் ' இது நிகழ்ந்தது' என்று நான் கேட்ட போது, கீழ்வரும் வசனத்தை எடுத்துக் காட்டினார்.
                               11:6 இன்னும் தேவைகளை நிறைவேற்றித் தர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை.மேலும்,அவை வாழுமிடத்தையும்,அவை அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்.இவையனைத்தும் தெளிவான அவன் சாட்சியங்களில் இருக்கின்றன.
                             நம்பிக்கை கொண்டவர்களே,ஒவ்வொருவரும் தத்தம் தேவைகளுக்கு தன்மீது பொறுப்பேற்படுத்துவோரைப் பற்றி இறைவன் இவ்வாறு நற்செய்தி கூறுகிறான்.
                       3:159...சகல காரியங்களிலும் உங்களைச் சார்ந்தோரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள்.பின்னர் முடிவு செய்து விட்டால்,அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துங்கள்.நிச்சயமாக அல்லாஹ் தன்மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.

                            இந்த வசனத்தை கவனிப்பீர்களானால்,"திருமதி முஸ்தபா அவர்களை காணவில்லை.போலீசில் தெரிவிக்கலாமா?" என்று கலந்து ஆலோசனை செய்யப்பட்டது.பின்னர்,இது பெண் விஷயமாக இருப்பதன் காரணமாக வேண்டாம் என்று முடிவு செய்யப் பட்டது.அந்த நேரத்தில் ' அல்லாஹ் ஒருவனைத் தவிர கதி கிடையாது ' என்ற எண்ணம் மேலோங்க அவனைத் தவிர உதவியாளனாக இருப்பதற்கும்,பாதுகாப்பாக இருப்பதற்கும் யார் இருக்கிறார்கள்.ஆகவே 'அவன் மீதே பொறுப்பேற்படுத்துவோம்.இன்னும் நம் பாவங்களுக்காக மன்னிப்பையும் மேற்கொள்வோம்' என்று முடிவு செய்த போது,முஸ்தபா உட்பட அனைவருடைய மனமும் ஏற்றுக் கொண்டது.நிச்சயமாக இறைவனைத் தவிர இந்த மனநிலையினை அனைவருடைய உள்ளத்திலும் கொண்டு வர சாத்தியமே இல்லை.' அல்லாஹ் தன்மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கிறான்' என்ற அந்த உண்மை எவ்வளவு சத்தியம் என்பதையும்,இது அவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருப்பதன் காரணமாகவும் நிச்சயமாக மனிதர்களின் தேவைகளை நிறைவேற்றித் தர பொறுப்பேற்றுக் கொள்ள அவனுக்கு நிகரானவன் இல்லை என்பதையும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அறிவிக்கவும் நாடி விட்டான் என்பதையும் இந்தக் கட்டுரையின் உண்மை நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.