சனி, 10 ஜனவரி, 2015

மகா சக்தி ( ALMIGHTY) என்றால் என்ன?

"இந்திய அக்குபங்சரின் தந்தை" என்று அன்புடன் அழைக்கப் படுபவரும்,தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் மாதந்தோறும் நடைபெறும் இறைவழி மருந்தில்லா மருத்துவ கூட்டங்களில் உரையாற்றி வருபவரும்,இறைவழி மருத்துவத்தை மேற்கொண்டு மருத்துவ சேவை செய்து வருபவரும் ஆகிய டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின்   (Website: www.foolproofcure.net) இணைய தளத்தில் வாசகி ஒருவர் ஆங்கிலத்தில் கேட்டு எழுதிய கேள்விக்கு, நமது டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்கள் எழுதிய பதிலின் தமிழ் மொழியாக்கத்தினை நமது அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
கேள்வி;     அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,
உங்களின் பேச்சும்,எழுத்துக்களும் எனக்கு நிறைய அமைதியையும்,நிம்மதியையும் அளித்திருக்கிறது.எனக்கு மிகக் கடுமையான காய்ச்சல் கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்தன. அந்த சமயத்தில் எனக்கு பத்து கிலோ எடை குறைந்து விட்டது.அனைத்து மருத்துவங்களையும்,மாற்று மருத்துவங்களையும் பார்த்தும் எனக்கு குணமாகவில்லை.மனநிம்மதி இல்லாமல் பைத்தியம் பிடித்தவள் போல் உணர்ந்தேன்.உங்கள் மருந்தில்லா மருத்துவ கூட்டத்தில் கலந்து கொண்டஅன்று முதல் இறைவனின் கருணையால் என் வாழ்வில் நிறைய நன்மைகள்.ஆனால்,சமீப காலமாக ஒரு விஷயம் என்னை உறுத்துவதாக இருக்கிறது.மகாசக்தியான இறைவனை குறிப்பிடும் போது நீங்கள் "அல்லாஹ்" என்கிறீர்கள்.மேலும் குர்ஆனை எதற்காக மூலாதாரமாக சரிபார்ப்பதற்கு தேர்வு செய்கிறீர்கள்? நீங்கள் கூறுவதோ,'பின்பற்றுவதற்கு என்று எந்த மதமும் கிடையாது.வழிபடுவதற்கு எந்த இடமும் கிடையாது.நம்முடைய இருதயத்தை தவிர' என்று.இந்த விஷயத்தில் எனக்கு தெளிவு தேவைப் படுகிறது.
                                                                                                                                     கவிதா    A.S
                          டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் பதில் ;
 மகாசக்தி என்பது பற்றி
அல்லாஹ் ஒருவன்.அவன் ஒருவன்தான்.அவனுடைய எண்ணிக்கையில் அடங்கா பெயர்களில் ஒன்று மகாசக்தி.நாம் மகாசக்தி என்று குறிப்பிடும் போது தொடர்ச்சியாக அவன் ஓருவனைத் தவிர இல்லை என்று குறிப்பிட வேண்டும்.அல்லாஹ் என்பதன் அர்த்தம் மனிதர்களின் அனைத்து தேவைகளுக்கும் அவன் ஒருவனைத் தவிர இல்லை என்பதாகும்.நாம் அந்த ஒரே ஒருவனுக்கு எந்த ஒன்றையும் பூமியிலோ,வானத்திலோ அல்லது எவரையுமோ இணையாக்கக் கூடாது.அவ்வாறு செய்வோமானால் நமது பிரார்த்தனைகள் அல்லாஹ்விடமிருந்து பதிலைப் பெற்றுத் தராது.அவன் ஒருவனைத் தவிர இல்லை என்பதை கூறியிருந்தால் தவிர.ஆகவே நாம் இவ்வாறு கூறக் கூடாது. அல்லாஹ்வை மகாசக்தி என்று. நாம் கூற வேண்டியது மகாசக்தி அல்லாஹ் அவன் ஒருவனைத் தவிர இல்லை என்று.
                                           மகாசக்தி என்பது போல் நமது அனைத்து தேவைகளிலும் அவனுடைய பெயர் அல்லது பண்பு இருக்கிறது. உதாரணம்.தேவைகளை நிறைவேற்றுபவன் அல்லாஹ்.அவன் ஒருவனைத் தவிர இல்லை.செவியேற்பவன் அல்லாஹ்.குணமாக்குபவன் அல்லாஹ் .மன்னிப்பவன் அல்லாஹ்.கவனிப்பவன் அல்லாஹ். யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ். கருணையாளன் அல்லாஹ்.ஞானமிக்கவன் அல்லாஹ்.அமைதி அளிப்பவன் அல்லாஹ்.இப்படி பல..
                                    நாம் நம்முடைய கஷ்ட காலங்களின் தொடக்கத்திலேயே இறைவனை அழைக்கும் போது "அவன் ஒருவனைத் தவிர இல்லை" என்பதை தொடர்ச்சியாக கூறவில்லையானால்,கஷ்ட காலங்களின் உச்சத்தில் "கடவுளே,உன்னைத் தவிர என்னைக் காப்பாற்ற எவரும் இல்லை" என்று கூற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மேலும்,குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது ஒட்டு மொத்த மனித குலத்திற்கானதாகும்.குர்ஆன் மத சட்டங்களை நிராகரிக்கிறது.ஆனால், மனித குலத்தின் நேர்மையான வாழ்க்கைக்கு ஈருலகிலும் ( இம்மை,மறுமை ) வழி காட்டுகிறது.
                                                          அடுத்து, உங்களுடைய அடுத்த கேள்வியான குர்ஆனை எதற்காக மூலாதாரமாக எடுத்துக் கொண்டீர்கள் என்பதற்கு  நான் ஒப்புக் கொள்ள வேண்டும். எனக்கு என்ன தெரியுமோ? எதில் வாழ்கிறேனோ அதைத்தான் நான் கூற முடியும். நான் கேள்விப் பட்டதையெல்லாம்,இன்னும் நான் வாழாததை யெல்லாம் கூற இயலாது.நீங்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நான் என்னுடைய வாழ்க்கையில் வாழாததை உங்களிடம் கூறியிருந்தால் நீங்கள் உங்களுடைய மனதில் அமைதியையும்,ஆறுதலையும் அடைந்திருக்க மாட்டீர்கள். மேலும் உங்களுடைய நாட்பட்ட ஜூரத்திலிருந்தும் சுகமான முறையில் விடுபட்டிருக்க மாட்டீர்கள். மேலும் குர்ஆன் அகிலங்களின் அரசனாகிய அல்லாஹ்விடமிருந்து வழி காட்டக் கூடியது.
                               தமிழ் மொழியாக்கம்; மருத்துவர்.ஞானமூர்த்தி செல்; 093633 28741

                                             நன்றி;ஹெல்த் டைம் ஜனவரி 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக