திங்கள், 19 ஜனவரி, 2015

ஹீமோகுளோபின் (Haemoglobin) உடலில் அதிகரிக்க எளிய வழி !

                                                     உடலில் அதிகமான அசதி,எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடும் மனநிலை,உற்சாகமின்மை,எதிலும் ஆர்வமின்மை,உண்பதற்கு கூட எழுந்து போய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு,தூங்க வேண்டும் போல் இருக்கும்.ஆனால் படுத்தால் தூக்கம் வராது.தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி,அதனால் ஏற்படும் அசதி,எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்,இந்த நிலையில் தான் இன்று பல பேர் இருக்கின்றனர்.
                                              இந்த நிலைமையை நீக்க,மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை,மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரைப் பார்த்தால் இரத்தப் பரிசோதனை,இ.சி.ஜி என பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார்.அவர் கூறிய பரிசோதனைகள் அனைத்தும் செய்து,அந்த பரிசோதனைகள் அனைத்தையும் அவரிடம் காட்டினால்,உங்களுக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார்.நான் உங்களுக்கு மாத்திரை,மருந்து எழுதியிருக்கிறேன்.ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள்.சரியாகி விடும் என்பார்.அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும்,மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து,ஆறு மாதம் சாப்பிட்டதும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதி கூட சரியாகவில்லை.
                                                         நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த இரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடியவில்லை.உடல் களைப்பு அடைகிறது.பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால் எவ்வளவு தாமதம் ஏற்படுமோ,அதே தடங்கலும்,தாமதமும் உடலில் ஏற்படுகிறது.உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப் படுகிறது.
                                                         நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை,நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பிரித்து எடுத்துக் கொள்கிறது.எவ்வளவு சத்துக்கள்,எந்தெந்த சத்துக்கள் தேவையோ,அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக் கொண்டு,மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து வெளியேற்றி விடுகிறது.அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும்,அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை.மீதியை கழிவுப் பொருட்களாக வெளியேற்றி விடுகிறது.

                                 இரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14-18 கிராம் அளவிலும்,பெண்களுக்கு 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் போது,இரத்த சோகை என்ற நோயும்,மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.இரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை பரிசோதனைச் சாலையில் இரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரிய வரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து,களைப்பு,இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.
                                                      இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது இரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும்,உடலில் இரத்த ஓட்டத்தின் போது,நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போது அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை இரத்தம் ஏற்று  உற்சாகம் பெறுகிறது.பிறகு இரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது,தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்-டை-ஆக்ஸைடாக மாற்றி,நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது.பிறகு உற்சாக இரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது.மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை இரத்தத்தில் ஏற்றுக் கொண்டு,உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி,அவைகளை நன்கு இயக்கி உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது.
                                                        உடலில் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.நாட்டு மருந்து கடைகளில் உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும்.அவற்றை வாங்கி 72 நல்ல உலர்ந்த பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு,அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற விடுங்கள்.காலை 6 மணிக்கு பல் துலக்கி விட்டு,காலை ஒரு பழத்தை தின்று விட்டு சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு,சிறிது பழம் ஊறிய நீரைக் குடியுங்கள்.மாலை 6 மணிக்கு அல்லது இரவு 9 மணிக்கு கடைசியாக உள்ள ஒரு பழத்தை தின்று விட்டு மீதியுள்ள  நீரை குடியுங்கள்.இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்ட படி பழங்களை தின்று விட்டு,பழம் ஊறிய நீரை குடியுங்கள்
        நாட்கள்
காலை 6 மணி
மதியம்12 மணி
இரவு 9 மணி
மொத்தபழங்கள்
முதல் நாள்
1
1
1
3
2 ஆவது நாள்
2
2
2
6
3 ஆவது நாள்
3
3
3
9
4 ஆவது நாள்
4
4
4
12
5 ஆவது நாள்
4
4
4
12
6 ஆவது நாள்
4
4
4
12
7 ஆவது நாள்
3
3
3
9
8 ஆவது நாள்
2
2
2
6
9 ஆவது நாள்
1
1
1
3



மொத்தபழங்கள்
72
                                                         ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப் பாருங்கள்.தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டுள்ள படி செய்து பாருங்கள்.இப்பொழுது உங்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும்.இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.உடலில் உற்சாகம் பெருகும்.வலிவோடும்,வனப்போடும் உடல் மிளிரும்! இப்படி செய்து அருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர் இரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் இழந்த சக்தியையும்,உற்சாகத்தையும் நாம் மீண்டும் பெறலாம்.
                                                     செய்து பார்க்கலாமே!
                                                              (நன்றி : மாற்று மருத்துவம் இதழ் அக்டோபர் 2009)

                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக