செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

எது நல்லது ? மரபு முறை விவசாயமா ? நவீன முறை விவசாயமா ? ம.செந்தமிழன்

சர்க்கரை-டயாபடீஸ் என்ற நோய் (அது ஒரு நோயே அல்ல) பற்றி " இனிப்பு " என்ற புத்தகம் எழுதியவரும், சர்க்கரை நோயைப் பற்றிய ஆவணப் படம் எடுத்து வருபவருமான திரு.ம.செந்தமிழன் அவர்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற "நீயா ? நானா ?"நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை,அவரது முகநூலில் பகிர்ந்து கொண்டதை, நமது அனைவரின் நலன் கருதி இங்கு வெளியிடப் படுகிறது.
உங்களிடம் சொல்ல விரும்பும் அழுத்தமான சேதி!
                                                                                             ம.செந்தமிழன்

                           ’பசுமைப் புரட்சியின் விளைவாகத்தான் பஞ்சாப் சாராயத் தொழில் வளர்ச்சியடைந்ததுஎன சாராய ஆலை அதிபர் தனது அந்தரங்க கூட்டத்தில் பேசினால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், பொதுமக்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், ‘அறிவு ஜீவிஒருவர் பேசுகிறார். அதே நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன் என்பதால் அந்த சொற்களின் கழிவு என்மீதும் தெறித்ததை அருவருப்பாக உணர முடிகிறது.
வேறொரு இளைஞர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தவர். அவர் முன்னால் இயற்கை வேளாண்மையில் விளைந்த பழங்களையும், மரபணு மாற்றப்பட்ட பழங்களையும் வைத்தால் அவர் இயற்கை வேளாண் பழங்களைத்தான் சாப்பிடுவாராம். ஆனால், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் எந்தத் தீமையும் இல்லையாம். ஆகவே, நாமும் நம் சந்ததிகளும் மரபணு மாற்றப்பட்ட உணவுகளைத் தின்றுகொள்ளலாமாம். இதுதான் அவர் கற்ற கல்வியின் நேர்மை!
மற்றொருவர், ‘நான் எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லை. மரபணு மாற்றப்பட்ட உணவுகள் எல்லாம் மிகவும் பாதுகாப்பானவை. இவ்வாறு சொல்வது எனது நம்பிக்கை. இது ஆய்வுப்பூர்வமான முடிவல்லஎன்று துளியும் கூச்சமின்றிப் பேசுகிறார்.
இந்த மூவரின் முதுகுகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த விவசாயிகள், ‘கத்தரிக்காயில் அதிகம் நஞ்சு தெளிக்கிறோம், உருளைக் கிழங்கை வாங்கிவிடாதீர்கள் அது முழுவதும் ஆபத்தானது, முட்டைகோசு என்றாலே நச்சுக் காய்தான், காலி பிளவரை நச்சு நீரில் முக்கி எடுப்போம்என்று வாக்குமூலம் தருகிறார்கள்.
இந்த நீயா நானாவில் இயற்கை வேளாண் அணியில், நாங்கள் பேசியவற்றைவிட எதிரே இருந்தவர்கள் பேசியவை மிகுந்த கவனத்திற்குரியவை.
நண்பர்களே, உங்களிடம் ஒரே ஒரு கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்,
நிச்சயமாக நாம் விற்கப்பட்டுவிட்டோம். நமது உணவு உரிமை நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டு விட்டது. நமது வேளாண்மை உரிமை கொள்ளையிடப் பட்டு விட்டது
உணவையே நஞ்சாக மாற்றிய குரூர அறிவியலின் பலிகள் நாம். அது நம்மைப் பலி கேட்கிறது. நம்மில் பலர் அதற்குப் பலியாகிக் கொண்டும் இருக்கிறோம்.
நம்மிடம் தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் ஆண்ட்ராய்ட் அலைபேசிகள் உள்ளன. நம்மிடம் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளன. நம்மிடம் வசதியான வாகனங்கள் உள்ளன. நமது குடிநீர் நம்மிடம் இல்லை. நமது உணவு நம்மிடம் இல்லை. நமது நிலங்களும் நம்மிடம் இல்லை.
நேற்றைய நீயா நானா பார்த்துவிட்டு சென்னையிலிருந்து பேசிய எங்கள் தோழி பின்வருமாறு கூறினார், என் மகனை நான் பெற்றிருக்கக் கூடாது. வாழத் தகுதியில்லாத சமூகத்தில் அவன் பிறந்துவிட்டானே. அவனுக்கு நான் எந்தக் காயை, எந்தப்  பழத்தை நம்பிக் கொடுப்பேன்
              நீயா நானாவில் நான் பேசியதைப் பாராட்டி வாழ்த்துச் சொல்லும் நண்பர்களே, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. ஆனால், அவை இப்போது தேவையற்றவை. நமக்காக நாம் பேசித்தான் ஆக வேண்டும். நமது சமூகத்திற்காக நான் பேசுகிறேன். இது என் கடமை. நீங்கள் உங்கள் கடமையை உணருங்கள்.
                                முதலில், இந்த அவல நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். நமது உணவையே நஞ்சாக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்களைப் புரிந்துகொள்ளுங்கள்.
அடுத்ததாக, நமது விளைநிலங்களை, நமது உழவர்களை, நமது மரபுகளைப் பாதுகாக்கும் பணிகளில் உடனடியாக ஈடுபடுங்கள். நாம் பணியாற்றியே தீர வேண்டிய நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது. நமது சமையலறைக்குள் ஆட்கொல்லி நஞ்சுகளை அனுமதிப்பதைக் காட்டிலும் ஆபத்து ஏதுமில்லை.
நம் பிள்ளைகளின் முகங்களைப் பாருங்கள். அவர்களுக்கு ஊட்டி விடும் ஒரு பிடிச் சோறு நஞ்சற்றதாக இருக்கட்டும்!

திங்கள், 9 பிப்ரவரி, 2015

அளவாக மது (ஆல்கஹால்) அருந்தினாலும் அது ஆபத்தே!

தினமும் மிதமான அளவுக்கு மது அருந்தினால்,அது இதயத்திற்கு நல்லது, இரத்த அழுத்தத்தை குறைக்கும் என சில தரப்பில் சொல்லப் படுவது உண்டு.ஆராய்ச்சிகளிலும் உண்மையே என முன்னர் நிரூபிக்கப் பட்டுள்ளது.குறிப்பாக ஒரு கோப்பை 'ரெட் ஒயின்' அருந்தினால் அது இதயத்திற்கு மிகவும் நல்லது என,மற்றவர்களிடம் தகவல் பரப்பி வருவோர் அதிகம்.
                       ஆனால் இது தவறு என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் பிலடெல்பியா மாகாணத்தில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக கூறியதாவது;
       "குடிப் பழக்கத்திற்கும், இதயத்தின் பலத்துக்கும் இடையேயான தொடர்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.அமெரிக்கா,ஐரோப்பா,வடஅமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 155 ஆராய்ச்சியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.2.60 இலட்சம் பேர் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர்."
                   "குறிப்பிட்ட ஜீன்கள் கொண்ட நபர்கள்,வாரம் ஒன்றுக்கு,17 சதவீதத்திற்கும் குறைவான மது பானத்தை நுகரும் போது,அது பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை என்பதும்,மாறாக இதயத்திற்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தி உள்ளதும் தெரிய வந்துள்ளது.அதே நேரத்தில்,மதுபானம் உபயோகிக்காத நபர்களுக்கு இதயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதனால் குறைவாக மது அருந்தனாலும் அது பாதிப்பையே ஏற்படுத்தும்"
                   இவ்வாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
                                                                   நன்றி; தினமலர்,10.08.2014 கோவை பதிப்பு
               மேலே கண்டுள்ள மதுவைப் பற்றிய செய்தியானது பிரபல தமிழ் நாளிதழில் வந்ததாகும். நமது சமுதாயத்தில் மதுவைப் பற்றிய கூற்றுக்களும்,செய்திகளும் முரண்பாடான நிலையிலேயே நிலவி வருகின்றன. ஆதி நாளில்,இந்தியாவில் ஆரிய நாகரிகம் நிலவிய காலத்தில் அக்காலத்திய மனிதர்கள் சோம பானம்,சுரா பானம் ஆகியவைகளை அருந்தியதாக ரிக் வேதத்தில் கூறப் பட்டுள்ளதாக வரலாறு தெரிவிக்கிறது.
                     உலகம் முழுவதும் அந்தந்த நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்பவும் மதுப் பழக்கமானது மனிதர்களால் கடைப் பிடிக்கப் பட்டு வரப் படுகிறது. மனித குலம் தோன்றிய ஆதி நாளிலிருந்தே மனிதன் மதுவை அருந்த  துவங்கி விட்டான். ஆதாம்,ஏவாள் காலத்திலேயே உண்ண தடை செய்த கனியை உண்டதன் மூலம் நமது பாவங்கள் தொடங்கியதாக பைபிளில் கூறப் பட்டது போல, ஆதி நாளிலேயே மனிதன் போதைப் பொருட்களுக்கு அடிமை ஆகி விட்டான்..
                         2000 வருடங்களுக்கு முன்பே நமது தெய்வப் புகழ் திருவள்ளுவரும் தனது திருக்குறளில் "கள்ளுண்ணாமை" என ஒரு அதிகாரத்தை பதிவு செய்து தனது மதுவின் மீதான எதிர்ப்பை வெளிப் படுத்தியுள்ளார்.
                                     மதுவைக் குறித்த  நமது தமிழ்நாட்டின் இன்றைய நிலையை எண்ணிப் பார்த்தால் மனசாட்சியுள்ள எவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையே உள்ளது. அரசே மதுவிற்பனை செய்வதால் தமிழக மக்கள் அனைவருமே "குடிமகன்களாக" ஆகி விட்டார்கள். நடுத்தர மற்றும் வறுமைகோட்டிற்கு கீழ் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் அவர்கள் பெரும் வருமானம் அனைத்தும் இந்த மதுவிற்கே செலவு செய்தால் அவர்தம் குடும்ப வாழ்க்கைத் தரம்தான் எவ்வாறு இருக்கும்இந்த மதுப் பழக்கத்தால்தான் நாட்டில் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும்,ஒவ்வொரு தேர்தலையும் இந்த மதுப்பழக்கமே தீர்மானிக்கிறது.
                         தேர்தல் = பணம் + மது
         தற்போது நிலவி வரும் இந்த நிலை எப்போது மாறும் ?
           இறைவன் நாடினால் !
                                   மது (ஆல்கஹால்) வின் தீமைகள் குறித்து ஆங்கில ஆசிரியர் Martha M. Allen என்பவர் எழுதிய  Alcohol: A Dangerous and Unnecessary  என்ற நூல்  www.gutenberg.org  என்ற இணைய தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது. இந்நூலில் மதுவின் தீங்குகளைப் பற்றி தெள்ளத் தெளிவாக விவரித்திருப்பதோடு,ஆல்கஹாலை மருந்துகளில் கலப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பின்விளைவுகளும் குறிப்பிடப் பட்டுள்ளன.
                          இன்று ஆங்கில மருத்துவத்தால் பரிந்துரைக்கப் படும் டானிக் மற்றும் அனைத்து திரவ மருந்துகளில் ஆல்கஹால் கலக்காத மருந்துகளே இல்லை.
                           மேலே கண்ட நூலில் காணப் படும் வாசகங்கள்
                                 Foods are substances which, when taken into the body, undergo change by the process of digestion; they give strength and heat and force; they build up the tissues of the body, and make blood; and they induce healthy, normal action of all the bodily functions.
 Alcohol does none of these.

"The internal use of alcohol in disease is as injurious as in health."