சனி, 21 மார்ச், 2015

மருந்தே உணவானால் மக்கள் பொருளாதாரம் என்னவாகும் ?

இந்தியாவின் முதல் பெரும்பணக்காரர் திலிப் சங்வி - செய்தி சொல்வதென்ன !
ஒரு காலத்தில் நம் தேசத்தில் பெரும்பணக்காரர்கள் என்ற போட்டி டாட்டா மற்றும பிர்லா இடையிலே இருக்கும்
பிறகு ரிலையன்ஸ் திருபாய் அம்பானி பிறகு அவரின் மகன்கள்
ஆனால் இந்த ஆண்டு இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரராக சன் மருத்துவ குழுமத்தின் நிறுவனர் திலிப் சங்வி ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியை ஓரங்கட்டி விட்டு வந்திருக்கிறார்
சொத்து மதிப்பு 154000 கோடிகள் சற்றேறக்குறைய
நமது நாட்டின் மதிப்பு மிக்க மருந்து நிறுவனங்களான க்ளாஸ்கோ, ஃப்சைர், சிப்லா, ரன்பேக்ஸி, டாக்டர் ரெட்டிஸ், மைக்ரோலேப்ஸ் ........... எல்லோரையும் பின்னுக்கு தள்ளி இந்த மருந்து நிறுவன அதிபர் முன்னால்.
இன்னொரு செய்தி இவர் தான் உலகின மிகப்பெரிய மருந்து தயாரிக்கும் தொழில் பணக்காரர் உலக பிரசித்தி பெற்ற ரேன்பேக்ஸி நிறுவனத்தையும் வாங்கப் போகிறாராம்
ஆனால் இது நல்ல அறிகுறியாக இல்லை
ஏனென்றால் ஒரு நாட்டில் விவசாயி ஒருவர் முதல் பணக்காரர் என்றால் விவசாயம் செழுமையாக இருக்கிறது என்று அர்த்தம்
ஏனென்றால் ஒரு நாட்டில் தொழில் அதிபர் ஒருவர் முதல் பணக்காரர் என்றால் தொழில் செழுமையாக இருக்கிறது என்று அர்த்தம்

ஒரு நாட்டில் மது தொழிற்சாலை நடத்துபவர் பெரும்பணக்காரர் என்றால் அதை வளர்ச்சி என்று கொள்ளாமல் தேசத்தில் குடிப்பவர்கள் அதிகரித்து விட்டனர் என்று தான் கொள்ள வேண்டும்

அதைப் போல் மருந்து தொழிலில் உள்ளவர் பெரும் பணக்காரர் என்றால் தேசத்தில் விவசாயம் மற்றும் தொழில் பின்னுக்குப் போய் நோய் அதிகரித்து விட்டது என்றுதானே எணணத் தோன்றும்
 உலகின் மிக அசுத்தமான நகரம் டெல்லி எனவும் உலகில் உள்ள முதல் 20 மிக அசுத்தமான நகரங்களில் 13 நமது நாட்டிலே உள்ளன என்று உலக சுகாதார மைய்யம் தெரிவித்துள்ளதும் இந்த செய்தியும் நம்முடைய சுகாதார சூழலையே பறைசாற்றுகின்றன.
நாம் விழித்துக் கொள்ள வேண்டும். வியாதிகளை குறைக்க ஒவ்வொரு இந்தியனும முயல வேண்டும் சுற்றுப்புற சூழலை மாசு ஏற்படுவதை தவிர்க்க முயல வேண்டும்

உறுபசியும ஓவாப் பிணியும் செறு பகையும
சேராதி   யல்வது நாடு
என்று வள்ளுவன் நாட்டிற்கு இலக்கணம் வகுக்கிறான்
அதாவது ஒரு நாடு சிறந்த நாடு என்றால் அங்கு
பசி இருக்க கூடாது
நோய் இருக்க கூடாது
பகை இருக்க கூடாது (வெளிநாட்டு பகையும் உள்நாட்டிலே பாதுகாப்பும் இருக்க வேண்டும்)
சன் மருத்துவ குழுமம் (SUN PHARMA) பற்றிய தகவல்கள் அதன் வெப் சைட்டில் எக்கச்சக்கமாய் கிடைக்கிறது. விரும்புவோர் பார்க்கலாம்.
இணைப்பு : http://www.sunpharma.com/
 
அக்குபங்சரில் இயற்கை விதி மீறல்களால், பஞ்ச பூத சக்திகள் தன் நிலை மாறுவதால் கழிவுத் தேக்கம் ஏற்பட்டு, கழிவு நீக்கமே நோய் அறிகுறிகளாக உருவாகின்றன.ஆனால் அந்த அறிகுறிகள் ஆங்கில மருத்துவத்தால்  மக்களிடம் நோய்களாக சொல்லி பயமுறுத்தப் பட்டு அவர்கள் பணம் எவ்வாறு கொள்ளையடிக்கப் படுகின்றன என்பதற்கு கீழே காணும் மருந்துகளே சாட்சி !
           BRAND NAME
         GENERIC NAME
      CATEGORY
       STRENGTH
 PACKING                   DETAILS        
THERAPY    AREA


AB PHYLLINE
ACEBROPHYLLINE
CAPSULES
100MG
STP OF 10 TAB/CAP
Respiratory
AB PHYLLINE SR 200
ACEBROPHYLLINE
-N/A-
-N/A-
-N/A-
Respiratory
AB PHYLLINE SYRUP
ACEBROPHYLLINE, METHYLPARABEN IP, PROPLYPARABEN IP
SYRUP
10MG, 1.80MG
1 BTL
Respiratory
ACAMPROL
ACAMPROSATE CALCIUM
TABLETS
333MG
STP OF 6 TAB/CAP
Neurology and Psychiatry
ACUCAL
CALCIUM CITRATE, VITAMIN D3, MAGNESIUM HYDROXIDE
TABLETS
200MG
STP OF 10 TAB/CAP
Vitamins
ADCAPONE
ENTACAPONE
TABLETS
200MG
STP OF 10 TAB/CAP
Neurology and Psychiatry
ADDWIZE 10MG 10 TAB
METHYL PHENIDATE HYDROCHLORIDE VSP
TABLETS
10MG
STP OF 10 TAB/CAP
Neurology and Psychiatry
ADENOJECT 30MG/10ML 1 AMP
ADENOSINE
AMPOULES
30MG/10ML
1 AMP
Cardiology
ADENOJECT INJ 6MG/2ML 1 AMP
ADENOSINE
AMPOULES
6MG/2ML
1 AMP
Cardiology
ADESAM 200
S-ADENOSYL METHIONINE
-N/A-
200MG
-N/A-
Neurology and Psychiatry
ADESAM 400
S-ADENOSYL METHIONINE
-N/A-
400MG
-N/A-
Neurology and Psychiatry
ADFOVIR
ADEFOVIR DIPIVOXIL
TABLETS
10MG
STP OF 10 TAB/CAP
Infections
ADMENTA XR 14
MEMANTINE HYDROCHLORIDE
-N/A-
-N/A-
-N/A-
Neurology and Psychiatry
ADMENTA XR 7
MEMANTINE HYDROCHLORIDE
-N/A-
-N/A-
-N/A-
Neurology and Psychiatry
ADMENTA-10
MEMANTINE HYDROCHLORIDE
TABLETS
10MG
STP OF 10 TAB/CAP
Neurology and Psychiatry

வெள்ளி, 6 மார்ச், 2015

நமது அனைவரது கனவும் டாக்டராக, இன்ஜினியராக ஆக வேண்டும் என்பதுதானே !

                              நாம் அனைவரும் சிறுவர்களாக இருந்த போது பள்ளியில் படிக்கும் காலத்தில் "நான் நன்றாக படித்து பெரிய இன்ஜினியராக ஆக வேண்டும். நல்ல டாக்டராக ஆக வேண்டும்" என்பதே நமது எல்லோரது பெருங்கனவாக இருந்தது. நானும் அதுபோலவே சிறுவயதில் கனவுகளை சுமந்தவன்தான் ! ஆனால் பள்ளியிறுதி வகுப்பிற்கு மேல் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க இயலவில்லை. ஆனால் அகுபங்சர் என்ற மருத்துவத்தை பற்றி அறிந்த பிறகு, நானும்  அதனை கற்று ஒரு நோய் நீக்கும் நிவாரணராக, ஹீலராக(Acupuncturist ) ஆகியிருக்கிறேன்.
                                    இதைப் போல் ஒரு டாக்டராக ஆகவேண்டும் என்ற பெருங்கனவோடு படித்த ஒருவர் டாக்டர். ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் இறைவழி மருந்தில்லா மருத்துவ கூட்டத்தில் கலநது கொண்டு ஆங்கில மருத்துவத்தில் இருந்து எவ்வாறு இறைவழி மருத்துவத்திற்கு மாறினார் என்பதனை கீழ்வரும் ஹெல்த் டைம் கட்டுரையின் மூலம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டி இங்கு இணைய தளத்தில் வெளியிடப் படுகிறது.
                        வீட்டுச் சூழலில் இறையருளால் சுகப்பிரசவம் !  
    டாக்டர் ஆக வேண்டும்;மக்கள் போற்றி புகழ வேண்டும்,பெருமை கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் MBBS படிப்பை முடித்து விட்டு, அதைத் தொடர்ந்து மேற்படிப்பு பிரிவில் காது,மூக்கு,தொண்டை சிறப்பு மருத்துவப் படிப்பில் எனக்கு இடம் கிடைத்து கல்லூரியில் சேர்ந்த நேரம், முதன்முதலாக டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் கருத்தரங்கத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
                                        இறைவழி மருத்துவம் என்றால் என்ன என்பதைப் பற்றி அறிய வாய்ப்பு கிடைத்தது.உணர்ச்சிகளில் வாழாமல், உணர்வுகளில் வாழ வேண்டும்.அகப் பார்வை கொண்டு வாழ்தல்; ஞானம்,சிந்தனை கொண்டு செயல்படுதல் போன்றவை அக்கூட்டத்தின் மூலம் எனக்கு கற்பிக்கப் பட்டது.இறைவன் அருளால் இறைவழி வாழ்க்கை 2008ம் ஆண்டு முதல் எனக்கு கிடைத்தது. என் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தாட்சிகள் எனக்கு காண்பிக்கப் பட்டது.அதுவரை என்னுள் இருந்த உருவ வழிபாடும்,ஆங்கில மருத்துவ வழிமுறையும் இப்பொழுது அறவே நீங்கி மன அமைதியும், இறைவனின் அருளும் எனக்கு கிடைத்தது. 
                                                  விபத்தினால் இரு முழங்கால் முட்டி ஜவ்வில் ஏற்பட்ட வலியை அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே குணப் படுத்த முடியும் என்று கூறப்பட்ட ஆங்கில மருத்துவக் கூற்றை இறைவன் அருளால் பொய்யாக்கி முழுமையாக அவனுடைய அருளால் நீங்கியது. தோல் அலர்ஜி ஏற்பட்டு பல வருடங்களாக மாத்திரை,மருந்துகளை சாப்பிட்டு வந்து குணமாகாமல் இருந்த என்னை இறைவழி வாழ்க்கையின் மூலம் முற்றிலுமாக என் உடலில் அலர்ஜி மறைந்தது,இறைவழியில் திருமணம், இறைவன் அருளால் முதல் குழந்தை வீட்டிலேயே சுகப்பிரசவம்,இன்னும் தினம் தினம் அனைத்து காரியங்களிலும் இறைவனின் அத்தாட்சிகள் தெளிவாக்கப் பட்டது.
                                                  இறைவன் அருளால் இரண்டாவது குழந்தை கருவுற்றது. 'அவன்தான் கர்ப்ப காலங்களில் தான் நாடிய படி உங்களை உருவாக்குகிறான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் இல்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும்,ஞானம் மிக்கவனாகவும் இருக்கிறான்; எங்களுக்கு இரக்க சிந்தனையையும், பரிசுத்தத் தன்மையையும் அளிப்பாயாக; பயபக்தியுடையவராக இருக்கச் செய்வாயாக; அவர் பிறக்கும் நாளிலும்,இறக்கும் நாளிலும் இன்னும் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது சாந்தியும்,சமாதானமும் நிலைத்திருக்கச் செய்வாயாக' என்று இணையதளத்தில் டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களின் எழுத்து மற்றும் பேச்சின் மூலம் அருளப் படும்  இறை செய்திகள் அனைத்தும் என் பிரார்ததனையாக மனதில் அமைந்தது.
                              எனக்கு பிரசவம் இலேசாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மனதில் பத்து மாதங்களும் இருந்தது. 17.01.2015 அன்று இலேசான வலி அடிமுதுகில்  ஐந்து மணிக்கு மேல் ஏற்பட்டு, பத்து மணியளவில் கர்ப்பப் பை சுருங்குதல் அதிகமடைந்தது. வீட்டில் நானும், என் கணவரும் இறைவனிடமே பிரார்த்தித்துக் கொண்டும், டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் அவர்களிடம் தொடர்பு கொண்டோம்.அவர் " கவலையும்,பயமும் கொள்ள வேண்டாம்; இறைவனின் உதவி நல்லபடியாக அமையும்." என்றார்.அந்த பிரார்த்தனை என்னுள் இருந்த சிறு பயத்தையும், கவலையையும் முற்றிலும் நீக்கியது. 
                    11.30 மணியளவில் குழந்தையின் தலை தெரிந்து, உடனே வெளியேறியது. தண்ணீர் பையுடன் அதுவரை அது உடையவில்லை.ஒரு நிமிடத்திற்குள் குழந்தை வெளியேறி அழுது உயிர் பெற்றது. குழந்தை தொப்புள் கொடியுடன் தாய்ப்பால் அருந்தியது. அடுத்த 5ஆவது நிமிடத்தில் நச்சுக் கொடி வெளியேறியது.பிறகு 20,25 நிமிடங்களுக்குப் பிறகு தொப்புள் கொடி வெட்டப் பட்டது. இவை அனைத்தும் இறைவனின் அருளால் என் கணவரின் மூலம் எங்கள் வீட்டின் அறையிலேயே நிறைவேறியது.
       எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய இறைவன் ஒருவனுக்கே !
                       டாக்டர் S.சர்மிளா.MBBS,MD.டாக்டர் K.ராஜ்சாண்டன். MBBS,MD
                                                                         சென்னை செல்; 94861 67715, 98942 23017

                                                                                               நன்றிஹெல்த் டைம் மார்ச் 2015