வியாழன், 25 பிப்ரவரி, 2016

ஐயோ ! எப்படி சாப்பிடணும்னு கூட சொல்லிக் கொடுக்கணுமா ?

என்ன ஒரு கொடுமை! சாப்பிடறது எப்படின்னு கூட சொல்லி தரணுமாப்பா உனக்கு?

எப்படி சாப்பிட்டா நல்லதுன்னு ஜனங்களுக்கு தெரிய வேணாமா? அவங்க சார்பா தான்...

போதும்! அசடு வழியாத... சரி! சொல்றேன் கவனமா கேளு!
முதல் விஷயம் என்னான்னா... நாம குறைவா சாப்பிட்டா உணவை நாம ஜீரணிக்கிறோம்.. அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிச்சிடும்.

விளக்கமாவே சொல்றேனே! நாம அதிகமா வயித்தில போட்டு திணிக்காமModerate -ஆ சாப்பிட்டோம்னா அது உடம்புக்கு நல்லது! நோய் எதுவும் இல்லாம நீண்ட நாள் குறைஞ்சது 10ல இருந்து 40 வருஷம் வரைக்கும்Extra -வா சந்தோஷமா இருக்கலாம்.

சிலரு, இல்ல.. இல்ல.. பலரும் செய்ற தப்பு என்னான்னா, மணியை பாத்து சாப்பிடறது. பசி இருக்கோ இல்லையோ, சாப்பிடற டைம் வந்தாச்சுன்னா, சாப்பாட்டு தட்டுக்கு முன்னால உட்கார வேண்டியது! இது ரொம்ப தப்பு மாப்பு!

நிறைய பேரு செய்ற இன்னொரு தப்பு ஒரே நாள்ல 4 முறை 5 முறைன்னு சாப்பிடவேண்டியது. இதுவும் பெரிய தப்பு தான்.

விஷயம் என்னான்னா, இப்படி பசியில்லாம சாப்பிட்ட உணவு, வயித்துக்குள்ளாற தங்கி தேவையில்லாம எல்லா பாகங்களுக்கும் டென்ஷன் கொடுக்கிற வில்லன்பா. முக்கியமா ஜீரண உறுப்புகளுக்கு பெரிய வேதனை தான்போ! ஏண்டா பாவி! எங்களை சும்மாவே விடமாட்டியான்னு அதுங்கெல்லாம் ஓன்னு ஒப்பாரி வெச்சி அழுவுங்க!

அப்படி உள்ளே தள்ளின உணவு, ஜீரணத்திற்கு வராமலே இருக்குதுங்கிறது மட்டும் இல்ல, அதை வெளியே தள்ளவும் முடியாம சிரமமா போயிடுது நம்ப உடம்புக்கு! சாப்பிட்ட உணவு மூலமா நமக்கு சக்தி வரணும். ஆனா அதுக்கு மாறாக, நம்ப உடம்புக்குள்ள இருந்து இந்த வீணா போன உணவை வெளியே தள்ளுறதுக்கு உடம்புக்குள்ள ஏற்கனவே இருக்கிற சக்தி செலவு ஆகுது. இப்போ புரியுதா?

இந்த தப்பு அடிக்கடி தொடர்கதை மாதிரி தொடர்ந்தா, அப்புறம் சீக்காளியா மாற வேண்டியது தான். சோக்காளியா இருந்தவன் நோயாளியா ஆவறது, பெரிய கொடுமை தானே மாப்பு 

நான் திரும்பவும் சொல்றேன் நல்லா ஞாபகம் வெச்சுக்கோ! கொஞ்சமா சாப்பிட்டா நாம உணவை ஜீரணிக்கிறோம். அதிகமா சாப்பிட்டா உணவு நம்பளை ஜீரணிக்க ஆரம்பிச்சிடும்! O.kay வா!

புரியுது பங்காளி! சிலரு டேஸ்டா இருக்குன்னு அளவுக்கு அதிகமா, உணவை வயித்துக்குள்ள தள்ளுறாங்களே, என்னமோ நாளைக்கே உணவு ஏதும் கிடைக்காம, பஞ்சம் வந்துடும்ங்கிற மாதிரி...!!! இது கூட தப்பு தானே?

இதில என்ன சந்தேகம்? இயற்கையே இந்த தப்புக்கு அவங்களுக்கு தண்டனை கொடுத்திடுதே! வயிற்று உப்பசம், அஜீரணம், மந்தம், வாயு தொல்லை, தலை வலி, தொந்தி விழறது, சர்க்கரை வியாதின்னு  பல பல நோய்களை அவங்க பக்கம் அனுப்பி வைக்குதே மாப்பு!

அமெரிக்காவில நடந்த ஒரு ஆய்வுல, அதிகமா சாப்பிட்டு நோய்வாய் பட்டவங்கதினமும் ரெண்டு வேலை மட்டும் சாப்பிட ஆரம்பிச்சதுக்கு அப்புறமா எவ்வளவோ நன்மைகள் அவங்களுக்கு கிடைச்சிருக்காம்.

அவங்களுக்கு இருந்த நோயெல்லாம் மறைஞ்சி, ஆரோக்கியம் நல்லபடியா கூடி இருக்கு. உடல் எடையும் ஒரு சம நிலைக்கு வந்திருக்கு, அவங்க ஜீரண உறுப்புகள் எல்லாமும் கூட நல்லபடியா வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காம்.

உடலுக்கு நம்மோட ஆரோக்கியத்தை பத்தி நிறைய விஷயங்கள் தெரியுமப்பா. அதனோட பேச்சை கேட்டாலே போதும்! எல்லா நோயிலிருந்தும் நாம விடுபட்டுவிடுவோம்.

என்ன மாப்பு நான் சொல்றது?

சரியாத்தான் சொல்றீங்க! வேற எதனாச்சும் இருக்கா மாப்பு?

ம்... இருக்கே... உணவை நல்லா மென்னு சாப்பிடணும். Express ரெயில் மாதிரி சாப்பாட்டை உள்ளே தள்ள கூடாது. ஜீரணம் வாயிலிருந்தே ஆரம்பிக்குதுன்னு உனக்கு தெரியுமா பங்காளி?

உணவை நல்லா மென்னும் போது எச்சில்ல இருக்கிற Enzymes உணவோடு சேர்ந்து ஜீரணத்துக்கு உதவி செய்யுது. அப்புறம் பல்லு எதுவும், வயித்துக்குள்ள இல்லை தானே? அதனால உணவை மாவாக்கி, கூழாக்கி, வயித்துக்கு அனுப்பணுமே தவிர அப்படியே அனுப்ப கூடாது.வயிறு பாவம் இல்ல! வாயில்லாத அப்புராணிப்பா! அதை கொடுமை படுத்தலாமா, நீயே சொல்லு?

சாப்பிடும் போது தண்ணியை குடிக்க கூடாது. இது ஏன்னா?

ஜீரணத்துக்கு தயாரா வயித்தில தீவிர நிலையில Hydrochloric அமிலம் இருக்குது. தண்ணியை குடிச்சி அந்த அமிலத்தை நீர்த்து போக செய்தோம்னா, ஜீரணம் நடப்பது பாதிப்பு அடையுது. குறைஞ்ச பட்சம் சாப்பிட்டு 30  நிமிஷம் பொறுத்து தண்ணீரை குடிக்கிறது தான் நல்லது.

அதுக்கேத்த மாதிரி காரம், உப்பு எல்லாம் குறைவா இருக்கிற மாதிரி உணவு இருக்கிறது பெட்டர்.

சாப்பிடும்போது பேச கூடாது. இதை பெரியவங்க சொல்லி கேள்விபட்டிருப்ப இல்ல! ஆனா அது எதுக்குன்னு அவங்க சொல்லல இல்லை? அதுக்கு பதிலு இது தான்!

சாப்பிடறதை நாம தியானம் மாதிரி மனசை ஒருநிலை படுத்தி சாப்பிட்டோம்னா, சாப்பாட்டு ருசியோட ஒன்றி போவோம். அதிகமாவும் சாப்பிடமாட்டோம், குறைவாகவும் சாப்பிடமாட்டோம், ஜீரண வேலை சுலபமா நடக்க உதவி செய்றோம். அது மட்டும் இல்லாம தியானம் பழகுறதும் ஈஸி!

என்னது பங்காளி இது புது கதையா இருக்கு! சாப்பட்டை வெச்சே தியானம் பழகிட முடியுமா?

மாப்பு! தியானம் என்கிறது வேற ஒன்னும் இல்ல! நாம செய்ற செயலை மனம் ஒன்றி செய்தாலே அது தியானம் தான். நீ வேணா இன்னைக்கி சாப்பிடும் போது மனசு ஒன்றி, வேற ஏதும் சிந்தனை இல்லாம, யாருகிட்டேயும் பேச்சு கொடுக்காம, சாப்பாட்டிலேயே லயிச்சி, சாப்பிட்டு பாரு! அதனோட அனுபவம் எப்படி இருந்ததுன்னு அப்புறமா சொல்லு!

கண்டிப்பா இத்தனை நாள் அனுபவிக்காத ஒரு வித்தியாசத்தை உன்னால அனுபவிக்க முடியும். 

(படிக்கும் நீங்களும் கூடத்தான்! தியானம் போல சாப்பாட்டை சாப்பிட்டு உங்களுக்கு ஏற்பட்ட அனுவங்களை எனக்கு தெரியபடுத்துங்களேன்!)

கவலையில, கோபத்தில இருக்கும் போது சாப்பாட்டை மறந்திடு! கவலையில, கோபத்தில இருக்கும்போது வயித்தில ஜீரணிக்க தேவைபடுற அமிலங்கள்Enzyme-கள் எல்லாம் சரியாக சுரப்பதில்லை.

நீ அந்த மாதிரி நேரங்கள்ல, சாப்பிடாம விட்டேன்னா, உன் உடம்பு அதுக்காக, உனக்கு தேங்க்ஸ் சொல்லும்பா தேங்க்ஸ்!


இப்போ ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்பா. சாப்பாடு சரியான அளவு சாப்பிட்ட உடனே ஒரு சிறிய ஏப்பம் வரும். அந்த நேரத்தில நீ சாப்பிடறதை நிறுத்தி விடுறது பெட்டர். அந்த ஏப்பம் தான் உடம்பு நமக்கு கொடுக்கிற சிக்னல். எனக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்! 

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

இறைவழி மருத்துவம்

‘நினைத்தால் சுகம்எனும் இறைவழி மருத்துவம்
அகிலங்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளும் படைப்பாற்றல் தாம் படைத்த அனைத்து உயிர்களுக்கும் தம்மைத் தாமே காக்கவும், குணப்படுத்திக் கொள்ளவும் வல்ல ஆற்றலைக் கொடுத்துள்ளது.
அவ்வாறே மனிதனுக்கும். மனித உடல் தன்னைத் தானே குணம் செய்து கொள்ளும் ஆற்றலை படைப்பாற்றல் கொடுத்துள்ளது.. மனித அறிவு அதற்கு உதவக்கூடியதாய் உள்ளது.
இந்த தற்காப்பு ஆற்றலே கருவில் இருந்து முடிவு வரை உயிருக்கும், உடலுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது. நாம் இந்த தற்காப்பு சத்தியை பாதுகாக்க, புதுப்பிக்க, உறுதிப்படுத்திக் கொள்ள உதவும் அறிவையே மருத்துவ அறிவு என்கிறோம்.
இந்த வகையில் சித்தா, வர்மம், யுனானி, ஆயுர்வேதம், அக்குபஞ்சர். ரெய்கி, பிரானிக் ஹீலிங் போன்ற பல மருத்துவ முறைகளை இறை ஞானங்களாக படைப்பாற்றல் மனிதனுக்கு வழங்கியுள்ளது.
சித்தர்களாகிய முன்னோர்கள் தொகுத்துத் தந்த படைப்பாற்றலின் இந்த அருட்கொடையை, தன்னில் பிறரைக் காணும் தன்மை உடையவரும், தனது நலன்- மகிழ்ச்சி என்பது பிற உயிர்களின் நலத்தில் உள்ளது என்பதை அறிந்தவர்களால் மட்டுமே சிறப்பாக பயன் படுத்த முடியும்.
படைப்பாற்றலின் விதிகளை உணர்ந்து இறைவழியில் வாழ முனைபவர்க்கும், பிற உயிர்களின் நலத்தை விரும்புவோர்க்கும் பெரும் நன்மையாக, நினைத்தால் சுகம் எனும் இறைவழி மருத்துவ ஞானத்தை படைப்பாற்றல் கொடுக்கின்றது.
 ஓர் இறைவழி மருத்துவரால் உடல், மன நலம் பெற வேண்டி தம்மை அணுகுபவரின் துயரை விரைவில் தீர்க்க உதவ முடியும்.
இறைவழி மருத்துவம் பெற விரும்புபவர்களுக்கு, தான் நலம் பெற வேண்டும் எனும் ஆழமான விருப்பம் தேவை, தவிர வேறு எந்த வகையான, பிரார்த்தனையோ, சடங்குகளோ தேவையில்லை.
ஒப்பீடற்ற இறைவழி மருத்துவத்தின் சிறப்புகள் சில
1. சோதனை முறைகள் தேவையில்லை.
2. மருந்து மாத்திரை ஊசி போன்றவற்றை பயன்படுத்துவது இல்லை.
3. மருத்துவர் அருகில் இருக்கத் தேவையில்லை
.4. உதவி தேவைப்படுபவரை தொடத் தேவையில்லை
.5. வினாடிக்கும் குறைவான நேரத்துக்குள் வைத்தியம் நடந்து விடுகிறது.
6. உடன் துன்பம் நீங்கி உடல், மனம் சுகம் பெறுவதை உணர முடியும்.
7. மிகக் குறுகிய காலத் தவணைக்குள் நோய் நீங்கி சுகம் பெறலாம்
.8. கருவில் உள்ள குழந்தை முதல் மிக முதியவர் வரை எல்லொர்க்கும் ற்றது.
9. மருத்துவச் செலவை விரைவில் வாழ்விலிருந்து நீக்கிவிடலாம்.
10. கல்வித் தகுதியின்றி எல்லோரும் எளிதில் கற்று நன்மை பெறலாம்.
நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.
நண்பர்களே, இறைவழி மருத்துவம் பற்றி கேட்டிருந்தீர்கள், எங்கு யார்,எப்படிச் செய்கிறார்கள்? என்பது வினா.
மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமைகளை நன்கு சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுவோர்க்கே, சித்த மருத்துவம், இறைவழி மருத்துவம் பயன்தரும்.
இறைவழி மருத்துவத்தை பலர் இயல்பாக்ப் பயன்படுத்துகிறார்கள். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு, எல்லாம் விரைவில் சுகமாகிவிடும், அமைதியாக இருங்கள், இறைவன் நன்மையுண்டாக்குவான் என்று கூறுபவர்கள் இறைவழி மருத்துவம் செய்தவர்களாகிறார்கள். பெருமைக்காக, அந்த மருத்துவமனைக்குப் போ, இந்த மருந்துகளைச் சாப்பிடு, என்று நிலமை தெரியாமல் பயத்தையும், பதட்டத்தையும் ஊட்டி மேலும் குழப்புபவர்கள் துன்பத்திலிருப்பவரை மேலும் துன்பப் படுத்துபவர்களே.
கண்ட டாக்டர்ட எல்லாம் போய் மேலும், மேலும் துன்பத்தை இழுத்துகிடாம வீட்டில பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுட்டு ஓய்வெடுங்க சரியாகிடும் என்று சொல்பவர்களும் இறைவழி மருத்துவர்கள் தான்.
திருவள்ளுவர் சிறந்த இறைவழி மருத்துவரே, மருந்து பற்றிய குறள்களில் வாழ்க்கையை விழிப்புணர்வுடன் சுவையுங்கள் மருந்து தேவையே இல்லை என எளிமையாக நலவாழ்வக்கான வழிகாட்டுகிறார்.
நான் எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து எந்த ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்தியதில்லை. என் குழந்தைகளுக்கு மருந்துகளோ,தடுப்பூசிகளோ போட்டது இல்லை. என் குடும்பத்தினரோ, நணபர்களோ அலோபதி பக்கம் திரும்பியதில்லை.
தனக்குள் இருக்கும் இறையாற்றல் தன்னை குணப்படுத்தப் போதுமானது என்ற உணர்வை இறைவழி மருத்துவம் மூலம் பெற்றவர் யாரும் மருந்துகள் என்று எதையும் உட்கொள்வதில்லை. மேலும் அவர்கள் பிற மனிதர்களை உயர்வாகவோ, தாழ்வாகவோ எண்ணுவதில்லை, தமக்கு வெளியே இறைவனைத் தேடுவதில்லை. தனது அடிப்படைத் தேவைகளுக்கு மதிப்பளித்து வாழ்க்கையைச் சுவைப்பதையே இறைவழிபாடாக செய்வதுவருவதினால் அவர்களால் பிறர்க்கும் துன்பமில்லை.
நண்பர் சித்தர். பஸ்லூர் ரகுமான் மற்றும் அவரால் இறைவழியில் இணைந்தோரும் பல ஆண்டுகளாக  மக்களுக்கு இறைவழியில் வழிகாட்டி வருகிறார்கள். தங்களின் அனுபவத்தையும், ஆங்கில மருத்துவத்தின் கேடுகளையும்  அவரது ஹெல்த் டைம் மாத இதழ் மூலமாகவும், கூட்டங்கள் நடத்துவதன் மூலமாகவும், தமிழன் தொலைக்காட்சி நிகழ்ச்சி (6,30 வெள்ளிக் கிழமை மாலை) மூலமாகவும் வெளிப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வைத் தூண்டிவருகிறார். அவரது மாணவர்கள், இறைவழிமருத்துவம் பெற்றவர்கள் யாரும் சாதி மதம், இனம், என வேறுபாடு பார்ப்பதில்லை. விழிப்படைந்த மனிதர்களையும் சூழலையும் நேசிப்பவர்களாகவே பார்க்கிறேன்.
சித்தமருத்துவம் என்பது சாகாக் கலையைப் போதிக்கும் தமிழ் அறிவியலின் ஒரு சிறு பகுதியே. மனிதன் தனக்குள் இருக்கும் படைப்பாற்றலை உணர்ந்து, கலந்து, அதன் தன்மைகள்ப் பெறும் முயற்சியே சாகாக் கலை. இதில் வெற்றிபெற்றவர்கள் சித்தர்கள்.
உலகெங்கும் சித்தர்கள் இருக்கிறார்கள்.சீனாவின் லாவோட்சு தொகுத்துத் தந்த தாவோ, ஜப்பான் கொரியாவில் ஜென்,கார்லோஸ் வெளிப்படுத்திய டான் ஜுவானின் வழிகள் இவை போல
தாவோ சித்தர்கள் போல சொன்னால், ‘சொல்லப்பட்ட தாவோ உண்மையானதல்ல’ இறைவழியை உணரத்தான் இயலும். வாய்ப்பிருந்தால் மரபுவழி நலவாழ்வு மையம் வாருங்கள். பிறருக்கு நான் இறைவழியில் சுகப்படுத்துவதைப் பாருங்கள் நீங்களும் சுவைக்கலாம் இறைவழியை.
இறைவழி மருத்துவம் யாருக்கானது
மனதில் இயல்பாகத் தோன்றும் நன்மை, தீமையைப் பற்றிய இறையச்சத்தை நன்மையாக கருதி சிந்தித்துணர்ந்து நன்மையை நாடுபவர்களுக்கே இறைவழி மருத்துவம்.
திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். படித்தவர்கள் பலர், திருக்குறளில் நலவாழ்வு பற்றிய இறைவழி மருத்துவ-சித்த மருத்துவ நுட்பங்கள் மிக எளிமையாக விளக்கப் படுகின்றது. உணர்ந்து பின் பற்றுபவர் மிகச் சிலரே.
தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியாததா திருக்குறள். நம் நாட்டில் மக்கள் பணத்தைப் பயன்படுத்தி மருத்துவ காப்பீடு என்ற பெயரில் நடப்பது என்ன?
எந்த ஒரு நோயையும் குணப்படுத்த வக்கில்லாத மருந்து-அறுவை வணிகத்துக்கு மக்கள் பணம் விரையமாகிறது. மக்களின் உயிரும் உடலும் பலியிடப் படுகிறது.
இந்திய அரசின் சட்டப்பிரிவு மருத்துவம் மற்றும் அழகு சாதனங்கள் பற்றிய சட்டம் செட்யூல் J 51 படி எயிட்ஸ், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, ஆஸதுமா, கல்லீரல் சார்ந்த நோய்கள், கர்ப்ப பை சார்ந்த நோய்கள, போன்ற பல நோய்களுக்கு மருத்துவம் பார்க்க தடைகள் இருந்தும் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப் பணம் விளம்பரங்களாகவும், விழாக்களாகவும், கருவிகளாகவும் தடுப்பு மருந்துகளாகவும் வீணடிக்கப் படுவதும், மனித நலத்துக்கு எதிரான வணிகர்களின் பைகள் நிரப்ப படுவதும் ஏன்?
நம் நாட்டின் பல்கலைக்கழகங்கள் மனித எதிரிகளை வெளிப்படுத்தாமல அவர்கள் கொள்ளைகளுக்கு ஆதரவாக இருக்க காரணம் தமது செயல்பாடுகளுக்கு பெரிய வணிகர்களின் நிதி உதவியைச் சார்ந்திருப்பது தான்.
மக்கள் நலவாழ்வு பற்றிச் சிந்திக்காமல் இருக்க அனைத்து வழிகளிலும் (தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள்கள் போன்ற அனைத்து ஊடகங்களும்) தடுக்கப் படுகின்றனர். அடிமைக்கல்வி முறை, அடிப்படைத் தேவைக்கே(உணவு, தண்ணீர், உடை, வீடு) இவற்றுக்கே தொட்டுக் கொள் துடைத்துக் கொள் என்ற நிலையில் மக்கள் வாழ்க்கை.
காலை 7 மணியிலிருந்து இரவு 11 மணி வரை உழைத்தால்தான்- படித்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் எனும் நிலையில் மக்கள் வாழ்க்கை.
இதை எல்லாம் மீறி சிந்திக்க வாய்ப்பு பெற்றோர்தான் நலவாழ்வைத் தேடி நலம் பெறுகிறார்கள். ஒட்டு மொத்த சமூகமும் விழிப்படையும் போது தான் தனி மனித விடுதலை சாத்தியம். இதற்கே என் எழுத்தும் பேச்சும்.
நீங்கள் குறிப்பிட்டது போல் போலியான தற்போதைய மருத்துவ முறைகளையும், மனித நேயமற்ற அறிவியலையும் பழம் பொருள் காட்சியகத்தில் வைக்க போதுமான அறிவியல் மற்றும் நூட்பங்களுக்கு குறைவில்லை இந்த உலகத்தில்-நம் நாட்டில்.
ஆனால் மக்கள் தம் நிலை உணர்ந்தவர்களாக இல்லை. நீண்ட நாளைய அடிமைக் கல்வி, வாழ்க்கை முறை, துய்ப்பு வெறி, இதில் கிடைப்பதாக நினைக்கும் சுகம், இது கூட இல்லாமல் போய்விடுமோ எனும் பயம், என எல்லாம் தான் மனிதனை நல வாழ்வில் இருந்து தடுக்கிறது.
சிறிது துணிவும், விழிப்புணர்வும் போதும் நலவாழ்வைப் பெற.

                                                                                                                                      நன்றி: தமிழவேள்நளபதி
                                                                                                                    கைபேசி-93458 12080