வியாழன், 11 டிசம்பர், 2014

மனித உறவுகள் மேம்பட சில சுலபமான அறிவுரைகள்.

நானே பெரியவன்.நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை தவிருங்கள்.
எந்த விஷயத்தையும்,பிரச்சனையையும் நாசூக்காக கையாழுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரி.செய்ததே சரி என்று கடைசி வரை வாதாடாதீர்கள்.
குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
உண்மை எது, பொய் எது என விளங்காமல் இங்கே கேட்டதை அங்கேயும்,அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் தவிருங்கள்.
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்
அளவுக்கதிகமாகவும்,தேவைக்கதிகமாகவும் எப்போதும் ஆசைப் படாதீர்கள்.
எல்லாரிடத்திலும்.எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
கேள்விப் படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
அற்ப விஷயங்களையும் பெரிது படுத்தாதீர்கள்.
உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
மற்றவர் கருத்துக்களை,செயல்களை,நடக்கும் நிகழ்ச்சிகளை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
மற்றவர்களுக்கு உரிய மரியாதையை காட்டவும்,இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.
புன்முறுவல் காட்டவும்,சில அன்பு சொற்களை சொல்லவும்   (Love and Gratitude) கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
பேச்சிலும்,நடத்தையிலும் திமிர்த்தனத்தையும்,தேவையில்லாத மிடுக்கு காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் கடைப் பிடியுங்கள்.
பிணக்கு ஏற்படும் போது,அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன் வாருங்கள்.

தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் (Love and Gratitude)  சொல்ல மறக்காதீர்கள்.பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

1 கருத்து: